ஆசிரியர்களின் மதிப்பை உணர்வோம்
*ஆசிரியர்களின் மதிப்பை உணர்வோம்* நான் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர். நான் அரசுப்பள்ளியில் தான் கல்வி கற்றேன். என் மகனையும் எங்கள் ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் தான் சேர்த்துள்ளேன். தற்போதைய ஊரடங்கு காலத்தில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தமிழ்நாடு அரசு மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நேரத்தில் பலரது வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிவோம். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசு, தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றி வருவதை பலரும் வரவேற்று வருகின்றனர். இந்த நிலையில் அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் இந்த அரசின் மீது அதிருப்தி ஏற்படும் வகையில், சில நாட்களாக ஆசிரியர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்யவேண்டும் என்ற கருத்தை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவர்களிடம் விவாதம் செய்வதற்காகவோ, அல்லது ஆசிரியர்களின் சம்பளம் பறிபோய்விடுமே என்ற பதற்றத்திலோ, அல்லது ஆசிரியர்கள் மீது பரிதாபத்தை உருவாக்குவதற்காகவோ இந்தப் பதிவை நான் எழுதவில்லை. ஆசிரியர் என்ற ...